Pages

Friday, 12 June 2009

சூப்பெர் ஸ்டார் பஞ்சாயத்து



சமீபத்திய செய்தி, பிரபு தேவாவும், நயன்தாராவும் லவ்விட்டு, கல்யாணம் செய்வதாக முடிவு செய்தவுடன், முடிவை, பிரபு தேவா மனைவி ரம்லதிடம் தெரியப்படுத்தியிருக்கிறார். பிறகு மனைவி சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தில் முறையிட்டதாக கூறப்படுகிறது.


“ரஜினி சொன்னா பிரபுதேவா கேட்பார்னு நினைச்சாங்க. ரஜினியும் போன் பண்ணி பிரபுதேவா, நயன்தாரா ரெண்டு பேரையுமே வீட்டுக்கு வரச் சொல்லி, ரம்லத் முன்னாடியே பக்குவமாகப் பேசிப் பார்த்தார். தன் மனக்குமுறலை அடக்கமுடியாமல் கொட்டினார் ரம்லத். பிரபு தேவாவிடம் மூன்று பிள்ளைகள் பெற்ற பிறகு, இதெல்லாம் நல்லதில்லை என்று கூறியிருக்கிறார்.



நயன் தாரவிடமும் வேறு ஒருத்தி வாழ்க்கையைக் கெடுக்காதே, மேலும் பீல்டில் உனக்கு எதிர்காலம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

அதற்கு நயன்தாரா அப்போது பிரபுவை எனக்கு போன் செய்வதை நிறுத்தச் சொல்லுங்கள் என்று விட்டேத்தியாகப் பதில் அளித்திருக்கிறார்.

பிரபு தேவாவின் தரப்பிலோ தன் பிள்ளையை இழந்து தவித்தப் பொழுது, நயன்தாரா மிகவும் ஆறுதலாக இருந்தாராம், ஆதலால் கல்யாணம் செய்து கொள்கிறாராம்.

பிரபு தேவாவின் அப்பாவோ ரம்லத்தை விட்டு வந்தால் போதும் என்று சம்மதம் கொடுத்திருக்கிறார். (அப்படி என்ன குரோதம்)

இதெல்லாம் செய்திகளாக வருகின்றன. அனால் இவற்றையெல்லாம் எண்ணி பார்க்கும் பொழுது, நமக்கு சில கேள்விகள் எழுகின்றன.

இது அவர்களின் சொந்த வாழ்க்கை, அதில் நமக்கு கருத்து சொல்ல உரிமையிருக்கிறதா என்பதை விவாதத்திற்கு விட்டு விடுவோம். இதை செய்தியாக பார்க்கும் பொழுது கருத்து சொல்லலாம் என்றே தோன்றுகிறது.

நமக்குள் தோன்றும் சில கேள்விகள்.

பிரபு தேவா ரம்லத்தை விரும்பிதான் இரு வீட்டரையும் எதிர்த்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அப்படிஎன்றால் அந்தக் காதல் பொய்த்துவிட்டதா?

பிரபுதேவா மகனை இழந்த சோகத்தில் நயன்தாராவிடம் காதல் கொண்டுள்ளதாக சொல்கிறார்.அவரது மனைவியும் அதே சோகத்தில் தான் இருக்கிறார், அவர் இவரை விட்டு வேறு ஒருவரிடம் சென்றால் ஒத்துக்கொள்வாரா? சமுதாயம் ஒத்துக்கொள்ளுமா?

இவருடைய மற்ற இரண்டு குழந்தைகளின் கதி என்ன?

நாளை வேறு நேரத்தில் ப்ரபுதேவவிற்கு ஒரு நெருக்கடி, அப்பொழுது வேறு ஒருவர் ஆதரவாக இருந்தால் அவருடன் போய் விடுவாரா? இதை நயன்தாரா எண்ணிப் பார்த்தாரா?
இப்படியே போனால் இதற்கு எங்கே முடிவு.
எங்கே போகிறது நமது சமுதாயம்.

சரிங்க பிரபு மீனா என்ன ஆனாருங்கோ...................?

11 comments:

  1. கேட்ட கேள்விகள் நச்... பதில் சொல்ல முடியாத கேள்விகள்... தமிழர்ஸில் வோட்டு போட்டாச்சு

    ReplyDelete
  2. இவங்க எல்லாம் திருந்தாத ஜென்மங்கள் நண்பா

    ReplyDelete
  3. nayai kulipatti nadu veettil vaithalum----------------naai jenmangal

    ReplyDelete
  4. yes good questions posted by u, good post, nayandhaara should be careful.

    ReplyDelete
  5. இதெல்லாம் சினிமால சகஜமப்பா....

    ReplyDelete
  6. இவங்க எல்லாம் திருந்தாத ஜென்மங்கள் நண்பா

    ReplyDelete
  7. Kummachi naan pithan, i'm also in Doha

    Niyaz
    http://niyazpaarvai.blogspot.com/

    ReplyDelete
  8. Kummachi naan niyaz
    i'm also in Doha
    http://niyazpaarvai.blogspot.com/

    ReplyDelete
  9. niyaaz salam alaikum, please give me your contact details.

    ReplyDelete
  10. நியாஸ் சலாம் அலைக்கும், உங்களை தொடர்புக்கொள்ள விழைகிறேன், தங்களது தொடர்பு விவரங்களை தெரிவிக்கவும்.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.