Pages

Thursday, 3 December 2009

ஹாஸ்டல் அட்டூழியம்-------ஜூனியர் விகடன்


கடந்த வார ஜூனியர் விகடனில் ஒரு திடுக்கிடும் தகவல் என்ற பெயரில் கோயமுத்தூர் கல்லூரி விடுதியில் பெண்கள் அறையில் மது பாட்டில்களும், ஆணுறைகளும் கல்லூரி நிர்வாகம் அதிரடி சோதனையில் கண்டுபிடித்து செய்வதறியாது விழிக்கிறனர்.

இதன் உச்சம் ஒரு மாணவி உபயோகித்த ஆணுறைகளை பத்திரப்படுத்தி லேபல் இட்டு வைத்திருந்ததுதான். அவளை விசாரித்தபொழுது பிற்பாடு அவனில் ஒருவன் கணவனாக வந்தால் அவனை அதை வைத்து மிரட்ட என்று கூலாக சொன்னாளாம். நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது. புதுமைப்பித்தன் வார்த்தைகள் "கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே இது தான்யா பொன்னகரம்" தவறாக உபயோகிக்க வேண்டியுள்ளது.
யோசித்துப் பார்த்தால் தவறு எங்கிருந்து தொடங்குகிறது?.

நம்மை கேட்காமலே நம் வீட்டின் வரவேற்பறையில் நுழையும் தொலைகாட்சி தொடர்கள். நம்ம மொழி தொடர்கள் இன்னும் மாமியார் மருமகள் பழி வாங்கும் படலத்தை தாண்ட வில்லை. ஆனால் வடமொழியிலோ "போல்ட் அண்ட் பியூட்டிபுல்" போன்ற அமெரிக்க சோப் ஒபெரக்களின் தாக்கம் அதிகம். அதில் மச்சினனுடன் அண்ணி உறவு கொள்ளுதல், யாருடன் யார் வேண்டுமானாலும் எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம் என்பது சர்வ சாதாரணமாக காட்டப்படுகிறது. இதைப் பார்த்து வளரும் இன்றைய தலைமுறையினர் இது தவறு இல்லை என்று நினைக்கிறார்கள். தவறு தொலைக் காட்சியில் தொடங்குகிறது.

கிட்டத்தட்ட இருபது வருடம் முன்பு பெண்களுடன் பேசினாலே தவறு என்ற நினைத்த சமூகம், உலகமயமாக்குதலுக்கு கொடுத்த விலை.
பெசன்ட் நகர் பீச்சில் இரவு நடந்து செல்லும் பொழுது பெண்கள் குறிப்பாக இளம் பெண்கள் கையில் சிகரெட்டுடன் மூஞ்சியில் வூதிவிட்டு செல்கின்றனர். கூட வரும் ஆண் கையில் சிகரெட்டே இல்லை. மது சர்வ சாதாரண விஷயம் ஆகிவிட்டது. லண்டனிலும் பாரிசிலும், பார்க்கிலும், தரையடி ரயிலிலும் காணும் முத்தக் காட்சி, இப்பொழுது நம்ம ஊரில், பீச்சிலும் பார்க் மரத்தின் பின்பும் பார்ப்பது சர்வ சாதாரணம்.

பெற்றோர் கண் காணிப்பு இல்லாத பெண்கள் சிலர் ஏமாற்றப்படுகின்றனர், சிலர் வலிய வந்து ஏமாறுகின்றனர். கல்லூரிப் பெண்களின் பேச்சுக்கள் அவர்களுக்கு தெரியாமல் கேட்டுப்பாருங்கள், எத்தனை பாய் பிரிண்டுகள், எத்தனைப் பேரை டம்ப் செய்தாள் என்பதுதான் பிரதானமாக இருக்கும். போதாக்குறைக்கு இப்பொழுது சில காண்வெண்டுகளில் விழா என்ற பெயரில் பள்ளிப் பிள்ளைகளை இரவில் ஸ்கூலில் தங்க அனுமதிக்கிறார்கள். அவ்வாறு இருக்கும் கான்வென்ட்டுக்கு அடுத்த வீடுதான் என் வீடு. மொட்டை மாடியிலிருந்து பார்த்தால் விடிய விடிய பெண்களும் பையன்களும் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். சடுதியில் ஒரு ஜோடி காணாமல் போய் திரும்ப வரும்.
எங்கே போகும் எங்கே முடியும் இதெல்லாம் தெரியவில்லை?.

சுதந்திரம் எங்கு கொடுக்க வேண்டுமோ அங்கு கொடுக்கப்படவேண்டும், எங்கு தவறாகப் பயன் படுத்தப்படுகிறதோ அங்கு முடக்க வேண்டும்.

12 comments:

  1. ஹி.. ஹி.. சரியாத்தான் சொல்றிக...

    ReplyDelete
  2. நானும் படிச்சேங்க.. வேதனை.. வேதனை தவிர வேறு ஒன்றுமில்லீங்க...

    அந்த கட்டுரையில், சில பெண்கள் இதில் தவறு ஒன்றுமில்லை என்ற ரீதியில் பேசியதுதாங்க.

    ReplyDelete
  3. அந்த கான்வென்ட் மேட்டர் யை நான் நேரில் பார்த்துள்ளேன்.... சில உயர் தர பள்ளிகளில் இதற்கு மேலையும் போவர்கள்......

    ஜூவி ல அதை எழுதினவங்க ஏன் VIT யை போய் பார்க்கவில்லை ??????

    ReplyDelete
  4. உடல் நடுங்குகிறது இருப்பினும் உண்மை உண்மை தானே.. எதை நோக்கி சொல்கிறோம் தெரியவில்லை..முன்னேற்றம் என்ற பெயரில் சீரழிந்துக் கொண்டிருக்கிறோமா?

    //சுதந்திரம் எங்கு கொடுக்க வேண்டுமோ அங்கு கொடுக்கப்படவேண்டும், எங்கு தவறாகப் பயன் படுத்தப்படுகிறதோ அங்கு முடக்க வேண்டும்//

    உண்மைதான் இந்த வரிகள்...பின்பற்றுவோமா?

    ReplyDelete
  5. //சுதந்திரம் எங்கு கொடுக்க வேண்டுமோ அங்கு கொடுக்கப்படவேண்டும், எங்கு தவறாகப் பயன் படுத்தப்படுகிறதோ அங்கு முடக்க வேண்டும்.//

    சரியாகச்சொன்னீர்...

    நான் சொன்னால் பெண்ணிய எதிரி என்கிறார்கள.

    ReplyDelete
  6. இந்த வார உயிரோசையில் வெளிவந்துள்ள இதுபற்றிய கட்டுரையைப் படித்து, உங்களின் கருத்தைப் பதியவும்.

    ReplyDelete
  7. /////சுதந்திரம் எங்கு கொடுக்க வேண்டுமோ அங்கு கொடுக்கப்படவேண்டும், எங்கு தவறாகப் பயன் படுத்தப்படுகிறதோ அங்கு முடக்க வேண்டும்/////

    ஆண்களுக்கும் இது பொருந்துமா????? சத்தமில்லாமல் பலபேரோடு ஆண்கள் கூத்தடிக்கலாம் என்றால், பெண்களுக் கூத்தடிக்கலாம். பெண்கள் கூத்தடிக்க முடியாது என்றால் ஆண்களுக்கும் முடியாது.... என்னமோ போங்கள். இது பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்ட ஆணாதிக்க புத்தியில் எழுதப்பட்ட பத்தியாகவே படுகிறது

    ReplyDelete
  8. இது மன மாற்றமோ கால மாற்றமோ.., தடுப்பது கடினம் அவர்களாக உணர்ந்தால் தான் உண்டு...,

    ReplyDelete
  9. super fantastic excellent bale

    ReplyDelete
  10. /////சுதந்திரம் எங்கு கொடுக்க வேண்டுமோ அங்கு கொடுக்கப்படவேண்டும், எங்கு தவறாகப் பயன் படுத்தப்படுகிறதோ அங்கு முடக்க வேண்டும்/////

    ithu irubalarukkum porunthum. iruppinum udal reethiyahum, manam reethiyahum, pengal valimai kuraintharvakale. intha kattupadu adakkumurai alla, athihama akkaraiyahum.

    ReplyDelete
  11. sir intha article rhombavae super!!!. ungalukku intha maathiri girls pathi info vaendumna enna kaelunga. en collegela naerayavae irukku. enakku therincha ponnu 6 boys a dump panni 7th paiyyanoda kadalai podra!!!

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.