Pages

Wednesday, 7 July 2010

பிரபலங்களிடம் குண்டக்கமண்டக்க கேள்விகள்

சில பிரபலங்களிடம் ஏடாகூட கேள்விகள் குண்டக்க மண்டக்க கேளு? ஆட்டோ வராம நான் பாத்துக்கிறேன்னு நான் கும்பிடுற ஸ்ரீ ஸ்ரீ நித்திரவிபிரேமகுனியவைச்சான்சாமி கனவில் வந்து கேட்டுக் கொண்டதால் இந்தப் பதிவு.

இதற்கு உண்டான பதில்களை தொடர் பதிவாக அளிக்க மற்ற பதிவர்களிடம் விட்டுவிடுகிறேன். ஏதோ நம்மளால் முடிந்தது கொளுத்தி வைக்கிறேன்.

முதலில் தமிழ்தான் அவர், அவர்தான் தமிழ் அவர்களுக்கு.

செம்மொழி மாநாடு முடிந்தவுடன் சும்மா வூட்லே இருக்கப் போவதாக உதார் உட்டிங்களே, அஞ்சா குஞ்சனிடமும், தொளபதியிடமும் பேசிட்டிங்களா?
இனி கோட்டைப் பக்கம் போகமாட்டிங்களா?


அம்மா அவர்களுக்கு
கொடநாட்டில குப்புறப் படுத்துக்கிட்டு ..–விட்டுக்கிட்டு இருந்தா கோட்டையைப் புடிச்சிடலாம்னு இன்னுமா கனவு கண்டுகிட்டு இருக்கீங்க?
கட்சியிலே இன்னும் எத்தனைப் பேரு பாக்கி இருக்காங்க?

மருத்துவர் ஐயா அவர்களுக்கு



ஐயா அடுத்த தேர்தலுக்கு துவைத்துக் காயப் போட வேட்டியா புடவையான்னு கட்சியிலே ஒரு மனதா முடிவு செய்து விட்டீர்களா?

அப்படியே மகனுக்கு கோமணம் மற்றும் லங்கோடு துவைக்க ஏற்பாடு செய்வீங்கதானே?

சைகோ அவர்களுக்கு
கூட்டணி குழப்பம் உங்களுக்கு கிடையாது, ஆதலால் பொட்டி தயார் பண்ணிட்டிங்களா?

தமிழ் ஈழம் பற்றி குரல் உடுவீங்களா?

செம்மொழி மாநாட்டில் சொம்பு தூக்கிய கவிஞர்களுக்கு

வெற்றிகரமான மாநாட்டிற்குப் பிறகு, பாராட்டு விழாவிற்கு கவிதைகள் தயாரா?
போன முறை உமிழ் நீரை சொல்லி மற்றக் கழிவுகளை விட்டு விட்டீர்கள், இந்த முறை மறக்காம சேர்த்துக் கொள்வீர்கள் தானே?

தமிழக காங்கிரசாருக்கு

ஏனுங்க உங்க கட்சியிலே யாரைப் பார்த்துக் கேள்வி கேட்கனும் என்று அடுத்த நூற்றாண்டு முடிவதற்குள் சொல்லுவீங்களா?
முதலில் இந்தக் கேள்வி யாரை கேட்கனும் என்று விடிவதற்குள் யாராவது சொல்லுங்கப்பா?

கேப்டன் அவர்களுக்கு
கூட்டணி போட யாரவது உங்க வூட்டாண்ட வந்தாங்களா?

தனியா நில்லுங்க, ஆனா குவாட்டருக்கு கொதருகிற கூட்டணிக் காரங்களை சேர்க்க மாட்டிங்கதானே?


திரைப்பட துறைக்கு

அடுத்த சொம்பு தூக்கும் திருவிழா எப்போது?

இந்த முறை தொடை கறியும், தொப்புள் குருமாவும் தாராளமாக கொடுப்பீர்களா?

6 comments:

  1. நியாயமான கேள்விகள்...

    ReplyDelete
  2. அடுத்த சொம்பு தூக்கும் திருவிழா எப்போது?

    இந்த முறை தொடை கறியும், தொப்புள் குருமாவும் தாராளமாக கொடுப்பீர்களா?-----

    ok saniyan saidla varuthu

    ReplyDelete
  3. பளார் பளார்:)

    ReplyDelete
  4. கேள்விகள் அனைத்தும் அருமை.மற்றவர்களை விட்டுவிட்டீர்களே.(மா.க,இ.க,திரு,..)

    ReplyDelete
  5. பிச்சிபுட்டீங்க கும்மாச்சி...

    ReplyDelete
  6. ippa enna solreenga ippa enna solreenga...
    neenga ezhuthiyatha padichchuttu ellaam thazhakeela senjirukkaanga...

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.