Pages

Tuesday, 17 August 2010

காதலில்லா காமம்

அரையிருட்டில் தவிக்கவிட்ட


அப்பனும் ஆத்தாளும்

கூறுகெட்ட வாழ்க்கை கண்டு

குடிமுழுகி மறைந்து போக



மூச்சு முட்ட குடித்துவந்து

முள் மூஞ்சி மனிதர்கள்

மாரினிலே தேய்க்கையில்

மனசு ரொம்ப நோகுது



காதலில்லா காமம்

காசு பணம் கொடுக்குது

காமமில்லா காதல்

கடைசி வரை கசக்குது



என் வயது பிள்ளைகள்

ஏடேடுத்து படிக்குது

எனக்கு மட்டும் வாழ்கை

ஏன் இப்படி இருக்குது?

9 comments:

  1. நல்லா இருக்கு.

    ஆண்டாள்மகன்

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி நந்தா

    ReplyDelete
  3. //என் வயது பிள்ளைகள்

    ஏடேடுத்து படிக்குது

    எனக்கு மட்டும் வாழ்கை

    ஏன் இப்படி இருக்குது?//

    :(

    ReplyDelete
  4. ஜே வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

    ReplyDelete
  5. மிக அருமை நண்பரே

    ReplyDelete
  6. வளர்ந்து வரும் காதலர்கள் காமப்பசியாளர்களாகத்தான் இருக்கிறார்கள்

    என்றும் அன்புடன்
    உங்கள் வீர,முருகேசன்

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.