Pages

Thursday, 2 September 2010

கலக்கல் காக்டெயில்- 7 (18+++ மட்டும்)

பாசத்தலைவனுக்கு பாராட்டு




மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு அரசுக்கு நீர்பாசன வசதியை மேம்படுத்த இந்த வருடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியான ஆயிரம் கோடியில் வெறும் இருபது கோடியே பெற்றுக் கொண்டு அதற்கு உண்டான திட்டத்தை இன்னும் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கவில்லையாம்.

ஆனால் மற்ற எல்லா மாநில அரசுகளும் இந்த பணத்தை சரியாக உபயோகப் படுத்தியிருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதிலும் ஆந்திர அரசு ஆயிரம் கோடியை உபயோகித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அது சரி நம்ம அரசு எவ்வளவு வேலைதான் செய்வார்கள். இப்பொழுதுதான் செம்மொழி மாநாடு நடத்தி தமிழுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். அப்புறம் மானாட மயிலாட, குடும்ப விருத்தி, திரையுலகம் எத்தனை வேலை கவனிக்க வேண்டியிருக்கிறது, இதெல்லாம் என்ன ஜூஜூபி.



ரசித்த கவிதை



பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்

பயணம் போறேண்டா - நான்

பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்

பயணம் போறேண்டா

வெளியே படிக்க வேண்டியது நெறைய இருக்கும்

படிச்சிட்டு வாரேண்டா - சிலர்

படிக்க மறந்தது நெறைய இருக்குப்

படிச்சிட்டு வாரேண்டா.

நன்றி: பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்



ரசித்த ஜோக்

கணவன் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவுடன் மனைவி அவனிடம் “ஏங்க இந்த குளியறை குழாயில் தண்ணீர் வரவில்லை கொஞ்சம் சரி பண்ணுங்க என்றாள்.

அதற்கு அவன் எரிச்சலுடன் “என் நெற்றியில் என்ன ப்ளம்பர் என்று எழுதி ஒட்டியிருக்கா” என்றான்.

அடுத்த நாள் வழக்கம்போல் அவன் வீடு திரும்பியவுடன் “ஏங்க இந்த ஹால் பேன் வேலை செய்யவில்லை கொஞ்சம் சரி செய்யுங்க” என்றாள்.

அவன் இம்முறை மிக எரிச்சலுடன் “என் நெற்றியில் என்ன ஏலேக்ட்ரிஷியன் என்று எழுதி ஒட்டியிருக்கா” என்றான்.

அடுத்த நாள் அவன் வீடு திரும்பியவுடன் குழாயும் பேனும் ரிப்பேர் ஆகியிருப்பதை கண்டு மனைவியிடம் கேட்டான். அதற்கு அவள் உங்க நண்பர் வந்திருந்தார், அவரிடம் ரிப்பேர் செய்ய சொன்னேன் என்றாள்.

உங்க நண்பர் ரிப்பேர் செய்வதற்கு நல்ல சாப்பாடோ இல்லைக் கட்டிலில் விருந்தோ அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஹோ அப்படியா என்ன சமையல் செய்துப் போட்டாய் என்று கேட்டான்.

அதற்கு அவள் “என் நெற்றியில் என்ன சமையல்காரி என்று எழுதியா ஒட்டியிருக்கு” என்றாள்.

7 comments:

  1. காக்டய்ல் கலக்கல், கடைசி 18+ ரசித்தேன்...

    ஆமா, பிஸியா? வீட்டுப் பக்கம் கானோம்....

    ReplyDelete
  2. ஜே வருகைக்கு நன்றி

    ReplyDelete
  3. காக்டய்ல் கலக்கல்..

    கடைசி 18+ கலக்கல்...

    ReplyDelete
  4. ellamey nethiadithaan, aiyaa!

    ReplyDelete
  5. நல்லா எழுதுறிங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. Hi,
    Are u Wilbur Smith's fan? Fantastic! I saw this in
    your blog. I am a wilbur smith's fan too.Could u write a review of ur favourite WS book? .
    I like very much ur jokes. Thanks.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.