Pages

Tuesday, 11 October 2011

வளர்க்கிறவன் எஸ்கேப்

ஜல்லிக்கட்டு கல்யாணம் இரண்டிலும் வளர்க்கிறவன்  எஸ்கேப் ஆவான், அடக்குறவன் தான் அடிபட்டு சாவான்.
 கண்ணா லட்டு தின்ன ஆசையா
அம்மாவும் பவர்கட் பண்றாங்க, மீனவர்கள் செத்தா பிரதமருக்கு கடிதம் எழுதறாங்க, ஐயாவும் இதேதான் அஞ்சு வருஷம் செஞ்சாரு.......................இன்னா நடக்குது இங்கே?
கேப்டன் ஒரு குழந்தைக்கு பிரேமலதா என்று பெயர் வைத்தார்,................குஞ்சு இருந்தா என்னா பெயருங்க சுதீஷா?

எனது ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறியுள்ளது...............ஜெயலலிதா.#$%%^& ங்கொய்யால பரமக்குடிய கேரளாவுக்கு தாரை வார்த்துட்டாங்களா?
காதல் வந்தால் சொல்லியனுப்பு
பேங்க் பேலன்ஸ் இருந்தால் வருகிறேன்.

அடிக்க அடிக்கத்தான் பந்து மேலே வரும், ஆமாம் தலைவரே,
சிறையில் அடைக்க அடைக்கத்தான் உண்மை வெளியே வரும்.
கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தால் அவர் வருகிற தீபாவளிக்கு தனது வீட்டில் இருப்பார்,
அப்போ தலை தீபாவளி திகாரில் இல்லையா?
திராவிடக் கட்சிகளின் அத்தியாயத்தை முடிவுக்கு கொண்டு வரவே பாமக தனித்து போட்டியிடுகிறது.$%^& ராமதாஸ்
அடேங்கப்பா என்னா ஒரு வில்லத்தனம்?
கிழிக்க மட்டுமே தெரிந்த தலைவர்கள் கிழிக்கிறார்கள்.............சுப வீரபாண்டியன்
எத்தனை பேரின் ------------கிழித்த தலைவர் மேடையில் இருக்கும்பொழுதே என்ன ஒரு உள் குத்து?.
கடைசியில் நேரு மூக்கை நீட்டிடுவாராமே,
அதனாலதான் அம்மா வெற்றி கிடைக்கவில்லை என்றால், அமைச்சர்களை அப்படிய அபீட் ஆக சொல்லிட்டாங்களாம்.

10 comments:

  1. //காதல் வந்தால் சொல்லியனுப்பு
    பேங்க் பேலன்ஸ் இருந்தால் வருகிறேன்.//

    பேங்க் பேலன்ஸ் எந்தப் பக்கம் இருக்கணும்..? :-)))

    ReplyDelete
  2. //காதல் வந்தால் சொல்லியனுப்பு
    பேங்க் பேலன்ஸ் இருந்தால் வருகிறேன்.//

    \\பேங்க் பேலன்ஸ் எந்தப் பக்கம் இருக்கணும்..? :-)))//

    பேங்க் பேலன்ஸ் ஒரே பக்கம்தான் இருக்கணும்.

    ReplyDelete
  3. ஒரே தமாக்ஷா நல்லாவே அடிச்சி ஆடுறீங்க கும்மாச்சி அரசியல.கலக்கல்,கலக்குங்க.

    ReplyDelete
  4. எல்லாமே ரசிக்கும்படி இருந்தன. இதை : திராவிடக் கட்சிகளின் அத்தியாயத்தை முடிவுக்கு கொண்டு வரவே பாமக தனித்து போட்டியிடுகிறது.$%^& ராமதாஸ்
    அடேங்கப்பா என்னா ஒரு வில்லத்தனம்?
    - மிகவும் ரசித்தேன். நன்று!

    ReplyDelete
  5. மாப்ள கலக்கல்ய்யா...சிரிச்சி தாங்கல!

    எப்பவும் ஊட்டி விடுறவங்க வாய் மட்டும் பெரிசா திறக்குதே ஏன் டவுட்டு!

    ReplyDelete
  6. //
    ஜல்லிக்கட்டு கல்யாணம் இரண்டிலும் வளர்க்கிறவன் எஸ்கேப் ஆவான், அடக்குறவன் தான் அடிபட்டு சாவான்.//

    தத்துவம் நம்பர் 100000000001

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.