Pages

Monday, 9 April 2018

கலக்கல் காக்டெயில்-182

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை

மேற்படி பேரவை இயக்குனர் பாரதிராஜா, நடிகர் சத்தியராஜ், அமீர், செல்வமணி மற்றும் கவுதமன் அவர்களால் தொடங்கப்பட்டு இருக்கிறது. இதன் கொள்கைகள் கோட்பாடுகள் என்னவென்று தெரியாது, ஆனால் இப்பொழுதிற்கு காவிரி நீர் கிடைக்கும்வரை ஐ.பி.எல் போட்டியை நடக்கவிடமாட்டோம், மற்றும் கத்திபாராவை மூடியதுபோல் கவர்னர் மாளிகையை மூடுவோம், தேவைப்பட்டால் தலைமை செயலகத்திற்கு பூட்டுப்போடுவோம், மற்றும் சூரப்பாவை திரும்ப பெறவேண்டும். இயக்குனர் கவுதமன் எங்களை காப்பாற்றிக்கொள்ள ஆயுதம் ஏந்தவும் தயங்கமாட்டோம் என்று கூறியுள்ளார். இதெல்லாம் சரி இதற்கப்புறம் பேசிய சத்தியராஜ் "தமிழன் உணர்வு இல்லாத யாரும் இங்கிருக்காதீர்கள் வெளியேறுங்கள்" என்று கூவினார்.

இவருடைய காண்டு யார்மீது, எதற்காக இப்படி பேசுகிறார்? தன்மீதும் வெளிச்சம் விழவேண்டும் என்று கூறுகிறார் என்பது போன்றவை எல்லாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் தமிழ் உணர்வு தேடி ஆந்திரா நடிகையை மணந்த இயக்குனரும், தமிழ் உணர்வு தேடிக்களைத்து என் இனிய மலையாள மங்கையே என்று மகனுக்கு மணமுடித்தவரும் அருகில் நின்று தலையாட்டுவதுதான் ஆகச்சிறந்த முரண்.

காவிரி பாயும் கன்னித்தமிழ்நாடு

இது ஒரு பழைய தமிழ் பாடல் வரி, காவிரி பாயும் கண்ணிதமிழ்நாடு கலைகளுக்கு எல்லாம் தாய் வீடு. மரகதம் திரைப்படத்தில் டி. எம். சௌந்திரராஜன் அவர்கள் பாடிய பாட்டு.

அப்பொழுது காவிரியில் கர்நாடகம்  நிறைய தடுப்பணைகள் கட்டாத காலமாக இருக்க வேண்டும். பின்னர் வந்த உபரி தடுப்பனைகளாலும் கர்நாடக மாநிலம் விவசாய நிலங்களை பெருக்கியதாலும் காவிரி தமிழ் நாட்டில் பாய்வதற்கு யோசித்தாள். பின்னர் படிப்படியாக அவளை நீதிமன்றங்களை ஏலம் விட்டு அலைக்கழித்ததால் இப்பொழுது காட்சிப்பொருளாகி கர்நாடகத்திலேயே சிறைபட்டுவிட்டாள்.
எப்பொழுதாவது தென்மேற்கு பருவகாற்று தப்பித்தவறி திசைமாறி வீசி அபரிமிதமாக மழை பொழிந்தால், கர்நாடக அனைக்கதவுகளை திறந்து மேட்டூர் வந்து சிறைபடுவாள். அதற்கு மேலும் வரவேண்டும் என்றால் முதலமைச்சர் ஆணைப்படி முன்பெல்லாம் விடுவிக்கப்படுவாள்.

இப்பொழுது எதற்கு இதயெல்லாம்  பேசிக்கொண்டு என்று நீங்கள் கேட்பது கேட்கிறது.........இனி அவள் இந்தப்பக்கம் எட்டிப்பார்க்க வேண்டும் என்றால் முதலில் ஸ்கீம் தயாராக வேண்டும், அப்படினா என்ன? அதானே> இருங்கப்பா இப்போதான் மத்திய அரசே உச்சா நீதிமன்றத்திடம் அர்த்தம் கேட்டிருக்கிறது. இனி உச்சா பதில் சொல்லி பிறகு ஸ்கீம் வந்து அடப்போங்கய்யா?

அப்போ காவிரி மேலாண்மை வாரியம்?

அது ஒட்டு பிச்சைக்கு சொன்ன வார்த்தை. யார் வேண்டுமென்றாலும் உபயோகித்து கொள்ளலாம்? சரி ஸ்கீமிற்கும், மேலாண்மை வாரியத்திற்கும்  என்ன வித்தியாசம் என்று கேட்டீர்களேயானால்.

மத்திய அரசும், கர்நாடக அரசும் இந்த வழக்கில் வாதாடிய விதத்திற்கும், தமிழகம் இதை எதிர்கொண்ட விதத்திற்கும் உள்ள வித்தியாசம் தான். ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட நீரின் அளவை விட மேலும் குறைத்து இந்தப்பா இவளவுதான் போ..........இதுக்குமேல பேசக்கூடாது. என்னாது மேலாண்மை வாரியமா? போப்பா!! என்று முடித்துவிட்டார்கள்.

நானே கிறுக்கிய கவிதை 


காவிரி "யு டர்ன்" அடிக்கவேண்டும் 
கர்நாடக மக்கள் வேண்டுதல்.
கபினி கரை புரளும் பொழுது,
காவிரி தமிழ் நோக்கிப் பாயும்,
கண்துடைப்பு உண்ணாவிரதம்,
கதாநாயகர்கள் மேடைச்சண்டை,
கடந்த வருடம் போல் இந்த வருடம்,
கடற்கரையில் கிடையாது,
கவலையில் தொலைக்காட்சிகள்,
அரசியல் நாடக அரங்கேற்றம், 
அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம்.

கவிஞர் கும்மாச்சி, ஜூலை 25, 2009.


சினிமா 

இத்தனை நாட்கள் "ஹீரோ டாக்கிஸ்" புண்ணியத்தில் மாத மாதம் ஏழு டாலர் கொடுத்து நல்ல பதிப்பில் (நல்ல படங்கள் அல்ல) படங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம், இப்பொழுது அவர்கள் கடையை கட்டுப்படி ஆகவில்லை என்று இழுத்து மூடிவிட்டார்கள். அதோடு நில்லாமல் போகிற போக்கில் "யப்" டிவியுடன் கனெக்ஷன் கொடுத்துவிட்டு போய்விட்டார்கள். அங்கு வாடகை நான்கு டாலராம் ஆனால் நிறைய தமிழ் படங்கள் தென்படவில்லை. சமீபத்தில் "ரூபாய்" என்று ஒரு படம் பார்த்தோம், படம் நன்றாகவே இருந்தது. என்ன இந்த படம் தியேட்டரை அடைந்திருக்குமா தெரியவில்லை. அந்தப்படத்தில் வந்த கதாநாயகி மிகவும் இயல்பாக நடித்திருந்தார், அடுத்தவீட்டுப் பெண் போல தோன்றியது எனக்கு மட்டும்தானா?







6 comments:

  1. பாட்டு தான் பாடிக்கொண்டு இருக்க வேண்டும் போல...

    ReplyDelete
  2. கலக்கல் ஸூப்பர் நண்பரே

    ReplyDelete
  3. தனபாலன், கில்லர்ஜி வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. எல்லாமே சினிமா செய்திகளா இருக்கே!

    ReplyDelete
  5. ஆமா கலக்கலில் கொஞ்சம் சினிமா நெடி அதிகமாயிடிச்சு

    ReplyDelete
  6. பதிவு அருமை. ஆங்கில மொழிக் கலப்பைத் தவிர்ப்பது நல்லது. எல்லாம் கலந்து கலக்குகிறீர்கள். வாழ்த்துக்கள். கவிக்குறள் - 0016 - முட்டாளின் செல்வம்!
    https://newsigaram.blogspot.com/2018/04/KAVIKKURAL-0016-MUTTALIN-SELVAM.html
    பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
    #திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
    #சிகரம்

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.